யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு வவுனியா வளாகத்தின் மாணவர்கள் விடுதியில் வைத்தே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை அண்மையில் யாழ் பல்கலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது மாணவர்கள் மூவர் காயமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.