வவுனியா விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

நேற்று இரவு மேசன் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த சஜா என்ற 28 வயதுடைய இளைஞன் வேகக் கட்டுப்பபாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.