எதிர்வரூம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில், திருகோணமலை மாவட்டம் முழுவதிலும் இருந்து, 120 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சஜீத் வெல்கம தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரை, குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில், தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆராய்ந்து வருவதாகவும் மாவட்ட் உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.