சார்க் நாடுகளின் 22ஆவது பொதுச்சபைக் கூட்டத்தை பாகிஸ்தானில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. சார்க் அமைப்பின் துணைத் தலைவர் இப்திகார் அலி மாலிக் நேற்று இதனைத் தெரிவித்தள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி இந்த பொதுச்சபைக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவுகள் மற்றும் ஆக்பானிஸ்தான் முதலான உறுப்பு நாடுகளின் தூதுக்குழுவினர் இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.