மன்னார் மாவட்ட நுழைவாயில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இருந்த இராணுவத்தினர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த கட்டிடத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளனர்.

குறித்த கட்டிடத்தில் உள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தங்கள் முன் வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் நேற்றுக்காலை உத்தியோகபூர்வமாக வெளியேறியதோடு, மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பரமதாசனிடம் குறித்த பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடம் இராணுவ அதிகாரியினால் கையளிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.