Header image alt text

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைபாடுகளை கையேற்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது விசேட பிரிவு ஒன்றை அமைத்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளை அண்மித்ததாக நடைபெறும் உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டறிவதே இதன் நோக்கமென்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் வேட்பாளர்களை இலக்காக கொண்டு இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அது சம்பந்தமாக இந்த பிரிவு விஷேட அவதானம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. Read more

இலங்கை அரசாங்கம், பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்காதிருக்கின்றமைக்கு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதன் ஆசிய பிராந்திய பணிப்பாளர் ப்ரட் அடம்ஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இலங்கையின் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில், ப்ரட் அடம்ஸ் இந்த ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார். Read more

மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யமீனை தற்காலிகமாகப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

ஜனாதிபதி யமீன் சட்டங்களை மீறியுள்ளதால் அவர் ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கு தகுதியற்றவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மவ்மூன் அப்துல் கயூம் மற்றும் மொஹமட் நஷீட் உள்ளிட்ட மாலைதீவுகளின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஏனைய அனைத்து தலைவர்களும் மனுவில் கையொப்பமிட்டுள்ளனர். Read more

பாராளுமன்றத்தில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி விசாரணைகள் அறிக்கைகள் தொடர்பான விவாதம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதுவித தீர்மானமும் எடுக்கும் அதிகாரமில்லை என்றும்

ஆயினும் தேர்தலை தள்ளிப்போடுவது தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள பிணைமுறி தொடர்பான அறிக்கையும், அரச பொது சொத்துக்கள் ஊழல் தொடர்பான அறிக்கையும் தொடர்பாக பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க Read more

உள்ளூர் அதிகாரசபை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை 342 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 38பேர் இம்முறை உள்ளூர் அதிகாரசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பாக கடந்த 24 மணி நேரத்திற்குள் 26 முறைபாடுகள் கிடைத்துள்ளதுடன் அது தொடர்பாக 16 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதுக்காக நாளை காலை 10 மணிக்கு கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க சபாநாயகர் கருஜயசூரிய கவனம் செலுத்தியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தை கூட்டுவது சிறந்ததென பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்துள்ளமையால் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more

two young women taking selfie with mobile phone

திருகோணமலை, உட்துறைமுக வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர், மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு, நேற்று படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள், அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 27, 28 வயது பல்கலைக்கழகa யுவதிகள் எனவும் அவர்கள் இருவரும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டினால் பெரும்பாலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலைப் பிற்போடுவதற்கு நேரிடும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் பிரதமர் பாராளுமன்றத்தைக் கூட்டினால் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னரான ஒரு நாளில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹ_ல் தெரிவித்தார். Read more

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மீண்டும் ஒன்றிணைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல இதனை தெரிவித்துள்ளார். தேர்தலை இலக்காகக் கொண்டு இருத்தரப்பினருக்கும் இடையில், சில எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இருப்பினும் தேர்லின் பின்னர் இந்நிலை மாற்றம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரையில், தேசிய அரசாங்கம் பலத்துடனேயே தொடரும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை நாளையதினம் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை காலை 9மணிக்கு ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் குறித்து அறிவிப்பதற்கான கடிதங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். Read more