உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைபாடுகளை கையேற்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது விசேட பிரிவு ஒன்றை அமைத்துள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளை அண்மித்ததாக நடைபெறும் உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டறிவதே இதன் நோக்கமென்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் வேட்பாளர்களை இலக்காக கொண்டு இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அது சம்பந்தமாக இந்த பிரிவு விஷேட அவதானம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. Read more