இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான நீண்டகால உறவுகள் குறித்து பிரித்தானிய இளவரசர் எட்வரட் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் மற்றும் அவரது பாரியாரான இளவரசி ஸோஃபி ஆகியோர் நேற்று மதியம் இலங்கையை வந்தடைந்தனர்.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் விசேட அதிதிகளாக கலந்துகொள்வதற்காக அவர்களது இந்த விஜயம் அமைந்துள்ளது. அவர்கள் பெப்ரவரி 5ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்க உள்ளனர்.இக் காலப்பகுதியில், பொதுநலவாயம் மற்றும் கல்வி, இளைஞர்கள் தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தவுள்ளதாக, பிரித்தானிய அரசாங்கத்தின் இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், கண்டி தலதா மாளிகைக்கும், பேரதனை பூங்காவுக்கும் அவர்கள் விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.