இம் முறை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த எந்தவொரு வேட்பாளரும் தேர்தலுக்கு முன்னர் இராஜினாமா செய்ய முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் ஒருவரின் மரணத்தின்போது அல்லது தேர்தலின் பின்னர் மேற்கொள்ளப்படும் இராஜினாமாவின் போது கட்சியின் செயலாளர் வேட்பாளர் பட்டியலில் உள்ள பிரிதொரு நபரை நியமிக்க அதிகாரம் உள்ளது என்றார் அவர்.