மாலைத்தீவு உயர் நீதிமன்றம் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மற்றும் எட்டு எதிர்க்கட்சித் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் அவருக்கு 13 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. மேலும், நஷீட்டின் ஆட்சிகாலத்தில் 2012 ஆம் ஆண்டு நீதிபதியொருவரை தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என குற்றவியல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நடுவர் குழாம் தீர்ப்பளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.