ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸார் ஊடாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரை இலங்கைக்கு அழைத்து வர விஷேட பொலிஸ் குழுவொன்று டுபாய் நோக்கி சென்றுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவினர் தெரிவிக்கின்றனர். இன்று காலை அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்த சந்தர்பத்தில் டுபாய் விமான நிலையத்தில் வைத்து உதயங்க வீரதுங்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.