பாடசாலைகள் மற்றும் சிறுவர் நிலையங்களில், சிறுவர்களுக்கு ஏற்படுத்தப்படும் உடல் ரீதியான தண்டனைகளை ஒழிப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதன் ஆரம்ப கட்டமாக தண்டனை ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகள் தொடர்பில் அதிபர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது. சர்வதேச பாடசாலைகளினுள் இடம்பெறும் சிறுவர் சித்திரவதை தொடர்பான பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இந்த வேலைத்திட்டம் சர்வதேச பாடசாலைகளிலும் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.