உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் மேலதிக பட்டியலில் கிடைத்த ஆசனங்களுக்காக பெயரிடப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் வாரமளவில் தனக்கு கையளிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முழு பொறுப்பையும் குறித்த கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் ஏற்க வேண்டும் என அதன் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.