ஒட்டாவா சாசனமான கண்ணிவெடி எதிர்ப்பு சாசனம் தொடர்பான விசேட தூதுவர் இளவரசர் மயர்ட் பின் ராட் பின் செயிட் அல் ஹ_சைன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த மாதம் 4ம் திகதிமுதல் 7ம் திகதிவரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார். கண்ணிவெடிக்கு எதிரான சாசனத்தை அங்கீகரித்த 163வது நாடாக இலங்கை மாறுகின்ற நிலையில்,அவரது விஜயம் அமைகிறது. இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு, மீள்குடியேற்றம் போன்ற அமைச்சுகளின் செயலாளர்கள், பாதுகாப்பு படைத் தளபதிகள் மற்றும் கண்ணிவெடி அகற்றும் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோரை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் யாழ்ப்பாணம் – முகமாலை பகுதியில் இடம்பெறும் கண்ணி வெடி அகற்றும் பணிகளை பார்வையிடுவதற்காக, இந்த மாதம் 6ம் திகதி அங்கு விஜயத்தை மேற்கொள்வுள்ளார்.