திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேற்கொள்ளும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தை கடக்கும் நிலையிலேயே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். இன்றுகாலை 10மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடத்திலிருந்து திருமலை தலைமை காவல்நிலைய சந்திவரை பேரணியாக சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்தில் நிறைவுசெய்துள்ளனர்.