Header image alt text

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்திற்குட்பட்ட புதிய கொலனி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் சந்தனமேரி. கணவர் யுத்த நடவடிக்கை காரணமாக வலுவிழந்தவராக, எந்தவிதமான வேலைகளும் செய்யமுடியாதவராக வாழ்ந்து வருகிறார். பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளை தொடர மிகவும் சிரமப்படுகின்றனர்.

சந்தனமேரி அவர்கள் தினமும், சிற்றுண்டி வகைகளை தயாரித்து விற்பனை செய்து கிடைக்கக்கூடிய பணத்தைக் கொண்டே குடும்பத்தின் நாளாந்த செலவுகள், கல்வி செலவுகள் என்பன ஈடுகட்டப்படுகின்றது. போதியளவு முதலீடு இல்லாத நிலையில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. மூன்று வேளை உணவு என்பதுகூட நிச்சயமற்றுக் காணப்படுகின்றது. Read more

வடமாகாணத்தில் தகுதிபெற்ற எஞ்சிய 494 தொண்டர் ஆசியர்களுக்கான நியமனங்களை விரைவாக வழங்குமாறு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வடமாகாண சபையின் வாராந்த செயலாளர் மட்ட கூட்டத்தில் வைத்து முதலமைச்சர் இந்த தகவலை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக முதல்கட்டமாக ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டிருந்த 142 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.

பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து விமானப் பாகங்கள் சிலவற்றை பாணந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமையே திடீர்சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தபோது இவ்வாறு விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது. முன்னாள் விமானப்படை வீரரொருவரின் வீட்டில் இருந்து குறித்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து சுயவிருப்பத்தின் பேரில் நாடு திரும்புவதற்கான ஆவணத்தில், இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிடம் இருந்து பலவந்தமாக கையெழுத்து பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

த கார்டியன் இணைத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோரும், அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் இரண்டு பிள்ளைகளும் விரைவில் நாடுகடத்தப்படவுள்ளனர். மத்திய குயின்ஸ்லேண்ட் பிலோயிலா பகுதியில் வசித்துவந்த அவர்களது வீசா காலம் நிறைவடைந்த நிலையில், தற்போது அவர்களை நாடுகடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். Read more

ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கவுள்ள ஜனாதிபதி, ஜப்பானின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார். ஜனாதிபதி நாளை ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோவை சந்திக்கவுள்ளதுடன், மார்ச் 14 ஆம் திகதியன்று உச்சி மாநாட்டு கலந்துரையாடல்களுக்காக பிரதமர் அபே ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். Read more

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மீனவர்கள் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். மேலும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், தொலைபேசி மூலம், இரண்டு முறை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் நாட்டின் நிலைமை தொடர்பில், இதன்போது பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பின்னர், நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில், ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்றை ஏற்படுத்த, அமைச்சர்கள் பலர் முயற்சித்திருந்தனர்.

ரயில் விபத்துக்களை கட்டுப்படுத்தும் முகமாக, வீதிகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால் புதிய திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ரயில்; நேர குறிப்பு பலகைகளை, ரயில் பாதுகாப்பு கடவைகளுக்கு அருகாமையில் பொருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்று முதல் நாவின்ன, மஹரகம பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம் நேற்று ஈரான் மலைப்பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 11 பேரும் பலியாகியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இஸ்தான்புல் நோக்கி சென்ற துருக்கி நாட்டை சேர்ந்த தனியார் விமானத்தில் 11 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த விமானம் ஈரான் நாட்டு மலைப்பகுதியில் சென்றபோது கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் பலியாகினர் எனவும், ஈரான் மலைப்பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்து வருவதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் எனவும் அங்கிருந்து கிடைக்கும்ம் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

நேபாளம், காத்மண்டு, திபுடான் சர்வதேச விமானம் நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

67 பயணிகள் உள்ளிட்ட 78 பேருடன் தரையிறங்கிய யுஸ் பங்ளா என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. குறித்த விமானம் பங்களாதேஷில் இருந்து திபுடான் சர்வதேச விமானம் நிலையத்தை நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.