பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து விமானப் பாகங்கள் சிலவற்றை பாணந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமையே திடீர்சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தபோது இவ்வாறு விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது. முன்னாள் விமானப்படை வீரரொருவரின் வீட்டில் இருந்து குறித்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.