ரயில் விபத்துக்களை கட்டுப்படுத்தும் முகமாக, வீதிகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால் புதிய திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ரயில்; நேர குறிப்பு பலகைகளை, ரயில் பாதுகாப்பு கடவைகளுக்கு அருகாமையில் பொருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்று முதல் நாவின்ன, மஹரகம பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.