சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை சவுதி அரேபியாவின் புரைதா என்ற பிரதேசத்தில் இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக, அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

42 வயதான  இலங்கை தமிழ்ப் பெண்ணான பிரியங்கா ஜெயசங்கர் என்பவரே  சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சவுதி பிரஜை ஒருவரே இந்தக் கொலையை புரிந்துள்ளார். பின்னர் அந்த சவுதி பிரஜையும் அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.