கண்டி சம்பவத்தையடுத்து இனவாத கருத்துக்கள் வீண் வதந்திகள் பரவாமலிருக்கும் வகையில் நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அரசாங்கத்தால் முடக்கப்பட்டிருந்த பேஸ்புக், வட்ஸ்அப் உட்பட சமூக வளைதளங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்த கலந்துரையாடல் ஒன்று குறித்த நிறுவன அதிகாரிகளுக்கும் அரசுக்கும் இடையே எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களையடுத்தே பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைதளங்கள் இலங்கை தொலைதொடர்புகள் மற்றும் ஒழுக்காற்று ஆணைக்குழு தற்காலிகமாக முடக்கியிருந்தது. 72 மணித்தியாலயங்களுக்கு மட்டுமே இக்கட்டுப்பாடு என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தொடர்ச்சியாக இவை முடக்கப்பட்டே இருக்கின்றன.