Header image alt text

முல்லைத்தீவு செம்மலைப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அம்பியூலன்ஸின் மோதி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அம்பியூலன்ஸ் மீது பிரதேச மக்கள் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாஞ்சோலை மாவட்ட மருத்துவமனையில் இருந்து, சம்பத்நுவர வெலிஓயா பகுதியில் உள்ள மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் ஒன்றும் செம்மலை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி வித்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். Read more

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வராத நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து மூன்று மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். சுpலாவத்தையைச் சேர்ந்த 51 வயதுடைய மில்ராஜ் மிரண்டா, 48 வயதுடைய இமானுவேல் மிரண்டா, 24 வயதுடைய மிதுறதன் மிரண்டா என்ற மூவருமே இவ்வாறு காணமல்போனவர்களாவர். Read more