முல்லைத்தீவு செம்மலைப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அம்பியூலன்ஸின் மோதி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அம்பியூலன்ஸ் மீது பிரதேச மக்கள் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 7.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாஞ்சோலை மாவட்ட மருத்துவமனையில் இருந்து, சம்பத்நுவர வெலிஓயா பகுதியில் உள்ள மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் ஒன்றும் செம்மலை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி வித்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். Read more