ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உபகுழுக் கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிகள் கலந்துகொண்டனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்றது. இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்த காலக்கிரம மீளாய்வு தொடர்பான விவாதம் நாளை வெள்ளிக்கிழமை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது. இதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹ_சைன் முதலில் உரையாற்றவுள்ளதுடன் இதன்பின்னர் உறுப்பு நாடுகள் தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவுள்ளன. கடந்த பெப்ரவரிமாதம் 26 ஆம் திகதி ஆரம்பமான ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இலங்கை தொடர்பான மற்றுமொரு விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.