Header image alt text

இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை இன்று திறந்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல் நிலை அனைவரும் அறிந்ததே. நாட்டில் அன்பு செலுத்துகின்ற அரசியல்வாதிகள் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்பது ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. Read more

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக, இலங்கையின் உயர்மட்டக் குழு சுவிற்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவுக்கு இன்று பயணமாகிறது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகின்றார். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புக்கூறல் மூலம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புகள் குறித்தும் இதன்போது தெளிவுபடுத்தப்பட உள்ளது. Read more

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், நேற்று ஜப்பானுக்குச் சென்றதை அடுத்து, கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வேலுசாமி இராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சராக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நாடு திரும்பும் வரை, கல்வி அமைச்சராக வேலுசாமி இராதாகிருஷ்ணன் செயற்படுவாரென, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். Read more

கொழும்பு – ஆமர் வீதியில் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்ற தம்பதியினர் சென்ற வாகனம்மீது இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதில் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படுகாயமைந்துள்ள மனைவி கொழும்பு தேசிய மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். Read more

மட்டக்களப்பு -வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள குறிஞ்சாமுனையில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் சடலங்கள் இன்று அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததின் பேரில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் குறிஞ்சாமுனையைச் சேர்ந்த 29 வயதான நீலவண்ணன் லோகநாயகி மற்றும் 36 வயதான கந்தசாமி வேதநாயகம் ஆகியோரை சடலங்களை மீட்டுள்ளனர். ஏற்கெனவே திருமணமான இவர்கள் இருவரும் இரண்டாந்தாரமாக ஒருவரையொருவர் திருமணம் செய்திருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. Read more

விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையர் ஷைத் அல் ராட் {ஹசைன் இலங்கைக்கு வருவதை எதிர்த்து பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக குறித்த இருவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக குருந்துவத்த பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் உள்ளாட்சி சபைகளுக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற தோழர்கள், உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது.
புளொட் அமைப்பின் வெளிநாட்டு கிளைகளின் இணைப்பாளர் தோழர் ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இவ் சந்திப்பில். Read more

dan news

சிறுபான்மை மக்களை இன்றும் சிறுபான்மையாக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையினரின் திட்டம் என்று வடமாகாண சபை விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார்.

Posted by DAN News on Donnerstag, 15. März 2018

நாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்துட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

குறித்த வர்த்தமானியை பிரசுரிப்பதற்காக அரசாங்க அச்சுத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கண்டியில் நிலவிய அசாதாரண சூழ்நிலை தொடர்ந்து கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டில் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தி வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்தித்துள்ளார்.

நேற்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வொன்றுக்காக திருகோணமலை சென்றிருந்த அவர், இந்த சந்திப்பை மேற்கொண்டிருந்தார். காணாமல் போனோர் விடயத்தில் உரிய நீதியைப் பெறுவதற்கான முயற்சிகளையும் அழுத்தங்களையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more