Header image alt text

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வு வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் வைத்தியக்கலாநிதி சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் நேற்றுமாலை நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, வைத்தியக்கலாநிதி சிவமோகன், மாகாணசபை அமைச்சர் க.சிவநேசன் உள்ளிட்டவர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் முன்னிலையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. Read more

யாழ்ப்பாணம், கிளிநோச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர்

மன்றத்தில் வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அவர்களின் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன் உள்ளிட்டவர்கள் மற்றும் மாகாண சபையின் உறுப்பினர்கள் முன்னிலையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் சபாநாயகர் கருஜயசூரியவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து குறித்த பிரேரணையை கையளிக்கப்பட்டுள்ளது. இதில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள நிலையில், அதில் 51 பேர் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களாவர். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் பாகிஸ்தான் செல்லவுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின் போது பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகிறது.

கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்தில் வீட்டின் அருகில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீட்டிற்கு அருகில் மலசல கூடம் அமைப்பதற்கு புதிதாக அகழப்பட்ட குழியில் குறித்த வெடிக்காத நிலையில் குண்டு அவதானிக்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more

கிண்ணியா கெங்கை மணல்ஆறு பிரதேசத்தில் காவல்துறையின் சுற்றிவளைப்புக்கு அஞ்சி மஹாவலி ஆற்றில் பாய்ந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா – பைசல் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய ரனீஸ் எனும் இளைஞர் என தெரியவந்துள்ளது.

மகாவலி ஆற்றில் நேற்று சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களைப் காவல்துறையினர் சுற்றிவளைக்க முற்பட்ட வேளையில் தப்பிச்செல்ல முயன்ற ஐந்து நபர்களில் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்தார். Read more

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப்படும் காலகிரமத்திற்கு அமைய 28 ஆம் திகதி இந்த பெறுபேறு வெளியிப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.