யாழ்ப்பாணம், கிளிநோச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர்

மன்றத்தில் வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அவர்களின் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன் உள்ளிட்டவர்கள் மற்றும் மாகாண சபையின் உறுப்பினர்கள் முன்னிலையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள், தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.