மூன்று மீனவர்களுடன் முல்லைத்தீவு நாயாறு கடற்பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போன கடற்றொழில் படகு தமிழக கடலூரில் மீட்கப்பட்டுள்ளது. இதனை தமிழக கடலோர பாதுகாப்பு காவற்துறை தெரிவித்துள்ளது.

எனினும், அந்த படகில் மீனவர்களோ, அல்லது எந்தவித கடற்றொழில் சாதனங்களோ இருக்கவில்லை என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12 ஆம் திகதி சிலாபம் பகுதியை சேர்ந்த 3 கடற்றொழிலாளர்கள், முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காக சென்றனர்.எனினும், இதுவரை மீனவர்கள் குறித்த எந்தவித தகவல்களும் வெளியாகியிருக்கவில்லை.