இலங்கையின் கடற்தொழில் திட்டங்களுக்கு, நியூசிலாந்து முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோனா கெம்கர் ((Joanna Kempker) இதனை தெரிவித்துள்ளார். கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவை, அவரது அமைச்சில் சந்தித்து இலங்கை மற்றும் நியூசிலாந்திற்கு இடையேயான இரு தரப்பு உறவுகள் உட்பட பல விடயங்கள் குறித்து அவர் விரிவாக கலந்துரையாடியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.