Header image alt text

கண்ணீர் அஞ்சலிகள்

Posted by plotenewseditor on 29 March 2018
Posted in செய்திகள் 

கண்ணீர் அஞ்சலிகள்

எமது தலைவரும். நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் அன்னை திருமதி தர்மலிங்கம் சரஸ்வதி அம்மா அவர்களின் பிரிவினை மிகுந்த கவலைகளுடன் ஏற்றுக்கொண்டு அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம்.

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களினதும் அவரது புத்திரன் தர்மலிங்கம் சித்தார்த்தனினதும் பண்பட்ட, மக்கள் நலன் சார்ந்த, எளிமையான தலைமைத்துவங்களின் பின்னால் சரஸ்வதி அம்மாவின் செயற்பாடுகள் உறுதியான ஆதாரமாக அமைந்திருந்தன என்றால் மிகையாகாது.

இரண்டு மகத்தான மக்கள் பிரதிநிதிகளை பாசத்துடனும், பண்புடனும், பரிவுடனும் வழிநடாத்திய சரஸ்வதி அம்மா அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதே வாஞ்சையோடும், உரிமையோடும் தனது மகனின் கட்சித் தோழர்களையும் அரவணைக்கத் தவறியதில்லை.
Read more

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்ததை யாழ்ப்பாண மாணவி பெற்றுள்ளார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் அகில இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதவேளை, கம்பஹா ரத்னமாலி மகளிர் கல்லூரி மாணவி கசுனி ஹங்சனா செனவிரத்ன மற்றும் சமோதி ரவிசா சுபசிங்க ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதன்படி பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடமுடியும். Read more

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவை குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளே கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இல 142, பேஸ்லைன் வீதி, கொழும்பு 9 இல் அமைந்துள்ள சிறைச்சாலை ஆணையாளரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தே நேற்று சிறைச்சாலைகள் ஆணையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில், குற்ற விசாரணை திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆயுத கப்பலுக்கு பொறுப்பாகவிருந்த விஜயதுங்க திலகரத்னவே நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், லயனகேமுல்ல, சீதுவயைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.