அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில், குற்ற விசாரணை திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆயுத கப்பலுக்கு பொறுப்பாகவிருந்த விஜயதுங்க திலகரத்னவே நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், லயனகேமுல்ல, சீதுவயைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.