யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகததில் நேற்று மாலை இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் வசம் எஞ்சியுள்ள காணிகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தாம் சாதகமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக இராணுவத்தளபதி தம்மிடம் உறுதியளித்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.