மன்னார் – வவுனியா பிரதான வீதியில் பிரமணாலங்குளம் பகுதியில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. மன்னாரிலிருந்து வவுனியா சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் பஸ் சுமார் 50 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்தோர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரமனாயங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ் விபத்தானது தனியார் பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஆகியவற்றுக்கிடையிலான போட்டித்தன்மையினாலேயே இடம்பெற்றுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.