பொதுநலவாய உறுப்பு நாடுகள் என்ற அடிப்படையில் பிரித்தானியாவும், இலங்கையும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளது.

21ம் நூற்றாண்டின் பொதுநலவாயம் சார்ந்த பகிரப்பட்ட சவால்களை முறியடிப்பதற்கான வளத்தை இரண்டு நாடுகளும் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.