மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச உழைப்பாளர் தினத்தை மே மாதம் 7ம் திகதிக்கு ஒத்தி வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் அலுவலகத்தில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று இந்த மனுவை சமர்ப்பித்துள்ளது. மே தினத்தை ஒத்திவைத்துள்ளமையானது தொழிலாளர்களின் உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.