பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
வாக்களிப்புகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் பெறப்பட்டுள்ளதுடன் இந்த வாக்களிப்பில் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. Read more
தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினையடுத்து துரித கதியில் செயல் பட்ட தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணாண்டோ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்றுக்காலை நடுக்குடா பகுதியில் ஒரு தொகுதி வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாபுலவுப் பகுதியில் படையினர் வசம் இருந்து விடுவிக்கப்பட்ட காணிக்குள் இருந்து 25 பராக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவு மேற்கு பகுதியில், விறகு வெட்ட சென்ற நபர் ஒருவர் குறித்த குண்டுகளைக் கண்டு, முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
வவுனியா – வேப்பங்குளத்தில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விபுலாந்தா கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்று வந்த விஜயகுமார் நிலுக்சனா என்கின்ற 16 வயது மாணவியே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள YouTube தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள சாப் புருனோ பகுதியில் YouTube தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. நேற்றையதினம் இரவு கூடிய, கட்சியின் உயர்பீடக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 அமைச்சர்கள் வாக்களிக்க உள்ளதாக கட்சித் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
புதிய நிறுவனங்களை பதிவுசெய்வதற்கான இலத்திரனியல் நிறுவன பதிவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.