முல்லைத்தீவு கேப்பாபுலவுப் பகுதியில் படையினர் வசம் இருந்து விடுவிக்கப்பட்ட காணிக்குள் இருந்து 25 பராக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவு மேற்கு பகுதியில், விறகு வெட்ட சென்ற நபர் ஒருவர் குறித்த குண்டுகளைக் கண்டு, முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன், பொலிஸார் குறித்த குண்டுகளை மீட்டுள்ளனர். 81 மோட்டார் குண்டுவகையினை சேர்ந்த குறித்த 25 பரா குண்டுகளே இவ்வாறு மீட்டு அழிக்கப்பட்டுள்ளது.