முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்வதற்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.ஆர். ஐயன்தொட்டுவ நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

இன்றையதினம் தொடக்கம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இவ்வாறு சுற்றுப்பயணம் செய்வதற்கு, மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், தற்போது, நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டினை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.