அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதேவேளை, தேர்தல் முறையில் குறைப்பாடுகள் இருக்குமாயின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்படவுள்ள மே மாதம் 7ம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.