காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் செற்பாட்டு பொறிமுறைகள் எதிர்வரும் மே மாதம் அளவிலேயே ஆரம்பிக்கப்படும் என அதன் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ் தெரிவித்துள்ளார்.

அலுவலகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், அலுவலகத்துக்கான பணியாளர்களை தெரிவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. மே மாதத்தில் பணியாட்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றதையடுத்து, பணியகத்தின் செயற்பாட்டு பொறிமுறை முன்னெடுக்கப்படும் எனவும் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.