தாய்லாந்தின் மூன்று போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன.

நல்லெண்ண பயணமாக இலங்கை வந்துள்ள குறித்த கப்பல்கள் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை இலங்கையில் தரித்து நிற்கும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கப்பல்களில் இலங்கை மற்றும் தாய்லாந்து கடற்படை அதிகாரிகள் பல்வேறு பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.