போதையினால் தமது கல்வி சீராழிவதாக தெரிவித்து வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலய மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்து வரும் நிலையில் பல தரப்பாலும் இதற்கு எதிராக குரல் எழுபப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலயத்தின் மாணவர்கள், பாடசாலை சமூகம், பெற்றோர், சிவில் பாதுகாப்பு குழுவினர், சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு என்பன இணைந்து இன்று பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.