கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு அமைக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைபடமானது மே மாதம் வெளியிட்டு வைக்கப்படுமென நில அளவையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், அதனை அச்சிடுவதற்கான வேலைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படுமெனவும் நில அளவையாளர் திணைக்களத்தின் பணிப்பாளர் பீ.என்.பீ. உதயகாந்த குறிப்பிட்டுள்ளார்.