கொழும்புத் துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்த, தாய்லாந்து கடற்படைக்கு சொந்தமான மூன்று இராணுவ பயிற்சி கப்பல்கள் நாளை நாட்டை விட்டு புறப்பட்டு செல்லவுள்ளன.

நல்லெண்ண அடிப்படையில் இங்கு வந்துள்ள இந்த கப்பல்களை கடற்படை மரபுகளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். இக்கப்பலின் கடற்படை பயிற்சி மாணவர்கள் பிரிவின் கட்டளைத் தளபதியும், கப்பலின் அதிகாரியும் மேற்கு பிரிவு கடற்படை தலைமையகத்தில் நிறைவேற்றுக் கட்டளைத்தளபதி ரியல்ட் அட்மிரல் நிசாந்த உலுகேதென்னவைச் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த அதிகாரிகள் கடற்படையின் தலைமையகத்தில் கடற்படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி ரியல்ட் அட்மிரல் நீல் ரொசைரோவை சந்தித்தனர். இதன்போது இரு தரப்புக்கும் முக்கியமான பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்த கப்பல்கள் இங்கிருக்கும் காலப்பகுதியில் கப்பல்களின் பணியாளர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுப் போட்டி, கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.