இலங்கையில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி படகு மூலம் தமிழகத்திற்கு சென்ற துருக்கி நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ராமேஸ்வரம் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தமிழக கடலோர காவற்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.