ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிபாரிசுகளை முழுமையாக இலங்கை அரசாங்கம் ஏற்றுகொண்டதன் விளைவாகவே இலங்கையில் இராணுவ வெற்றி தினம் நிறுத்தப்பட்டுள்ளது. இனியொருபோதும் இலங்கையில் இராணுவ வெற்றி தினத்தைக் கொண்டாட இடமளிக்க மாட்டோம் என இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் வாக்குறுதி வழங்கியுள்ளது என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இராணுவ வெற்றி விழாக்கள் இடம்பெறக்கூடாது என மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள நிபந்தனைகள் வெளிவந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இலங்கையின் பிரதிநிதியாக மனித உரிமைகள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி சரத் வீரசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Read more