எவன்காட் ஆயுத களஞ்சியசாலைக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் இராணுவ கெர்னல் இந்த மாதம் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்று காலி பிரதான நீதவான், நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்பிரட் விஜயதுங்க என்ற குறித்த முன்னாள் இராணுவ கெர்னல், சீதுவ – லியனகேமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து கடந்த மாதம் 28 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.