நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இந்தச் சட்டத்தில் எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது தொடர்பில் தேடியறிவதற்கு, குழுவொன்றை நியமிப்பதற்கும் அந்தச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.