அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்ககான வேதன அதிகரிப்பை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அந்தக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினர் லால் காந்த, எதிர்வரும் மேதினத்திற்கு பின்னர், சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியக் குறைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் செலவு, 6000 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.