இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் சபாநாயகர் அலி லரிஜானி சபாநாயகர் கருஜயசூரியவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்றையதினம் (19) பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றிருந்தது. நேற்றும் இன்றும் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள இந்த காலப்பகுதியில் பிரதமருக்கும் ஈரானிய சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.