இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.