பரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்காக மலேசியாவின் புத்ரா பல்கலைகழக்கத்தின் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்குபெறுவதற்காக இலங்கையில் இருந்து குழுவொன்றை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் அடங்கிய குழு, அங்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். இக் குழுவினர், நாளை நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.