யாழ். காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை பொலிஸார் பயன்படுத்துவதனால் மக்கள் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ளனர்.
1990 ஆம் ஆண்டிலிருந்து உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த காங்கேசன்துறை, 2016 ஆம் ஆண்டு முதற்கட்டமாக பகுதியளவில் விடுவிக்கப்பட்டது. அதன் பின்னர் கட்டங்கட்டமாக காங்கேசன்துறை துறைமுகம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பகுதியில் மக்கள் மீள்குடியேறியுள்ள போதிலும், பொலிஸார் சில வீடுகளைப் பயன்படுத்துவதால் அங்கு மீள்குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read more